மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு - kanniyakumari district news
கன்னியாகுமரி: திருவட்டார் சப்பாத்து பகுதியில் பரளியாற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன்பிடிப்பதற்காக வலைவிரித்துள்ளனர். ஆற்றில் குளிக்க வந்தவர்கள் வலையில் மலைப்பாம்பு சிக்கியிருப்பதை பார்த்து உடனே வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி 12அடி நீளமுடைய மலைப்பாம்பை மீட்டு சாக்குபையில் அடைத்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.