வெண்பட்டு, தங்க ஜடை, முத்து மாலை அணிந்து ஜொலித்த காஞ்சி காமாட்சி - Kanchipuram Kamatsiyamman Temple Festival
காஞ்சிபுரம்: வெகு விமரிசையாக நடைபெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காமாட்சியம்மன் சிலை, தங்கப் பல்லக்கில் வைத்து நான்கு ராஜ விதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. வெண்பட்டு, தங்க ஜடை, முத்து மாலை, செண்பகப்பூ, மனோரஞ்சிதம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிலையானது பல்லக்கில் ஒய்யாரமாக கண்ணாடியை பார்த்தவாறு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது.