பவானிசாகர் அணையில் பாசன நீரின் அளவு குறைப்பு - பவானிசாகர் அணையிலிருந்து பாசனநீர் குறைப்பு
ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட 1350 கன அடி நீர், தற்போது 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பாசனப் பகுதிகளின் தேவைக்கேற்ப நீர் திறப்பின் அளவு அவ்வப்போது மாறுபடுமென பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.41 அடியாகவும் நீர் இருப்பு 26 டிஎம்சியாகவும் உள்ளது.