திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!
தமிழ்நாடு- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ஈரோடு திம்பம் மலைப்பாதையில் கடும் பனி பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். கடுமையான பனியின் காரணமாக, சாலையில் திரியும் விலங்குகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.