முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை - இது 96 அல்ல 93! - அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு
சென்னை: முண்டியம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 1992-93 கல்வியாண்டில் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியருக்கு நன்றி கூறும் வகையில் பாதபூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஆசிரியர்களுடன் தங்களின் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ந்தனர். அந்தக் கல்வியாண்டில் கல்வி கற்பித்த 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம், 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துப் பெற்றனர்.