வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோட்டில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாமக பிரமுகர் ஒருவர் அவ்வழியாக வந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் ஓட்டுநர் மற்றும் பெண் ஆகியோர் காயமடைந்தனர்.