கடலூரில் கடல் சீற்றம் - சில்வர் பீச் கடற்கரையில் வெளியேறிய கடல் நீர் - கடலூரில் ஜவாத் புயல்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஜவாத் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் நேற்று கடலூர் சில்வர் பீச் மற்றும் தேவனாம் தாழங்குடா உட்பட மீனவ கிராம பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.