தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் உணவக உரிமையாளர்!

By

Published : May 21, 2021, 12:24 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் டி.எம்.ஆர் ஃபுட்ஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் ஜி. டி. சிவா. இவர், கடந்த கரோனா ஊரடங்கின்போது பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மூலிகை சூப்பை இலவசமாகக் கொடுத்து வந்தார். தற்போது பட்டுக்கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தினந்தோறும் காலை உணவாக ஊத்தப்பம், இட்லி, மற்றும் இடியாப்பம் போன்றவற்றை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார். அத்தோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் கொடுக்கும் சீட்டைக் கொண்டு வந்தால் அந்த சீட்டிற்கு இரண்டு டிபன் பார்சலையும் கொடுத்து விடுகிறார். வெறும் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த சமூகத் தொண்டை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details