கடல் அரிப்பு தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை - கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்டம் தாழங்குடா கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் கடல் அரிப்பு ஏற்பட்டு படகு தளம், மீன்பிடி உயர் தளம் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.