கோவை ஆட்சியரை சந்திக்க நடனமாடி வந்த கரோனா! - ஆட்சியரை சந்தித்த நடன கலைஞர்கள்
கோயம்புத்தூர்: நடனக் கலைஞர்கள் கரோனா உடை அணிந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், மாவட்டத்தில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக ஸ்டுடியோஸ் இருக்கும் கட்டடங்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல் சிரமத்தில் உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று நடன பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கட்டடங்களுக்கு வாடகை செலுத்த இரு மாத காலம் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
Last Updated : May 21, 2020, 1:45 AM IST