Stealing mobile phone: கோவை டவுன்ஹால் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான துணிக்கடை ஒன்று உள்ளது. நேற்று (டிசம்பர் 28) கடைக்கு வந்த அடையாளம் தெரியாத தம்பதி துணி வாங்குவது போல் நடித்து, அங்கிருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக துணிக்கடை உரிமையாளர் ராஜா கொடுத்தப் புகாரின் பேரில் உக்கடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.