கரூர் மாவட்டம் புகலூர் வட்டத்திற்கு உட்பட்ட திருக்காடுதுறை ஊராட்சி கரைப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அதிகாலை முதலே காத்திருந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது. தடுப்பூசி தீர்ந்து விட்டதாக திடீரென மருத்துவ குழுவினர் தெரிவித்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி பொதுமக்களை மருத்துவ குழுவினர் சமாதானப்படுத்தினர்.