தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2021, 1:13 PM IST

Updated : May 21, 2021, 1:53 PM IST

ETV Bharat / videos

பந்தல் வெட்டிய விவகாரம்: திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்!

மயிலாடுதுறை: சீர்காழி தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் அலுவலகப் பந்தலைச் சிலர் வெட்டி அகற்றியதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, அரசூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேசிய தலைவரான அம்பேத்கரை இழிவுபடுத்தியது மற்றும் தங்கள் கட்சியை இழிவுபடுத்துவது போன்ற செயலில் ஈடுபட்ட அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Last Updated : May 21, 2021, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details