தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த படகு: 9 மீனவர்களை காப்பாற்றிய கடலோர காவல் படை - கடலோர காவல் படை

By

Published : Jun 26, 2021, 4:04 PM IST

சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்ற படகு, ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டினம் அருகே நடுக்கடலில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால் 9 மீனவர்களும் கடலில் குதித்தனர். நெடுநேரமாக கடலில் மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் அவர்களை காப்பாற்றி கிருஷ்ணபட்டினத்தில் கரை சேர்த்தனர். அவர்களை சென்னை காசிமேட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details