ஆழ்கடலை தூய்மைப்படுத்தும் சிறுமி - chennai girl disposes plastic in the deep sea
சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரின் ஏழு வயது மகள் ஆராதனா அப்பகுதி ஆழ்கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். சென்னை நீலாங்கரை கடல் பகுதியிலிருந்து ராமேஸ்வரம் கடல் பகுதிவரை இப்பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தச் சிறிய தொடக்கம். எதிர்காலத்தில் தூய்மையான கடலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.