பாராசூட்டில் பறந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு - Awareness for voters flying in a parachute
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.