சிவாலயங்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்! - அன்னாபிஷேகம்
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கன்னியாகுமரி குகநாதீஸ்வரர், நாகையில் உள்ள மாயூரநாதர், புனுகீஸ்வரர், ஐயாறப்பர், படித்துறை விஸ்வநாதர், தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் உள்ளிட்ட ஆலயங்களில் அன்னாபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.