கரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிணைந்த மூன்று தலைமுறை! - 108 years old grandma covid vaccine
சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் 108 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன் வெங்கட்ராமன் ஹரி(83), பேத்தி மீரா ஹரியுடன் இணைந்து கரோனா தடுப்பூசியைச் உட்செலுத்திக்கொண்டார். மூன்று தலைமுறையினரும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது, பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது, கரோனா தடுப்பூசி 45 வயதிற்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.