தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

By

Published : Jan 17, 2021, 5:04 PM IST

Updated : Jan 17, 2021, 5:44 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று முதல் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியின் இரண்டாவது நாளான இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு முன்கள பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதை ஆய்வுசெய்தார்.
Last Updated : Jan 17, 2021, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details