ஆஹா இத்தனை உணவுகளா? விதவிதமாகச் சமைத்து அசத்திய பள்ளி மாணவர்கள்!
சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் 160 மாணவர்கள் கலந்துகொண்டு கருப்பு கவுனி பாயாசம், குதிரைவாலி பாயாசம், வாழையிலை அல்வா போன்ற விதவிதமான தமிழர் பாரம்பரிய உணவு வகைகளைச் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். உணவு செய்முறை, அதன் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST