குடும்பத்தோடு இணைந்து விளக்கேற்றிய ஆர்.வி.உதயகுமார் - ஆர்.வி.உதயகுமார்
நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலில் விளக்கேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நேற்று பொதுமக்களும், சினிமா பிரபலங்களும் வீட்டு வாசலில், மாடிகளில் விளக்கேற்றி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். அந்தவகையில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் தனது குடும்பத்தோடு இணைந்து விளக்கேற்றினார்.