படங்களை கலைப் படமாக எடுங்கள் - இயக்குநர் தருண் கோபி - புறநகர் இசைவெளியிட்டு விழாவில் இயக்குநர் தருண் கோபி
இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள 'புறநகர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் தருண் கோபி பேசுகையில், சினிமா இன்று சீரழிந்து விட்டது. சாதி இல்லையென்று சொல்லும் ஒரே ஊடகம் சினிமாதான் . ஆனால் இன்று சினிமாவில் சில இயக்குநர்கள் தங்கள் சாதியை உயர்த்துவதற்காக பிற சாதியை தாழ்த்துகிறார்கள். படங்களை கலைப் படமாக எடுக்க வேண்டும், சாதிப் படமாக எடுக்காதீர்கள். சாதியை சொல்லி படம் எடுப்பவர்களை நான் செருப்பால் அடிப்பேன் .திரௌபதி படத்திற்கு பலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றார்.