தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையார் கோவிலில் வைகாசி மாதப் பிரதோஷம்

ETV Bharat / videos

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பிரதோஷம் - அரோகரா முழக்கம் எழுப்பி நந்தியை வணங்கிய மக்கள்! - Vaikasi Month Pradosham

By

Published : May 18, 2023, 10:33 AM IST

திருவண்ணாமலை:பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடியது, உலகப் பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு வைகாசி மாதப்பிரதோஷம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையார் கோவிலில் பெளர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம் புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் போன்ற வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீப ஆராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின்பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்கள் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற வைகாசி மாத பிரதேஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் அண்ணாமலையாருக்கே உரிய “அரோகரா” கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதையும் படிங்க:பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டினை சேர்ந்தவர்கள் சிறப்பு யாகம்!

ABOUT THE AUTHOR

...view details