தமிழ்நாடு

tamil nadu

8 அடி நீள கருஞ்சாரை பாம்பை அசால்ட்டாக பிடித்த பாம்பு பாண்டியன்!!

By

Published : Dec 21, 2022, 3:01 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திட்டை மாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர், மகாலெட்சுமி. இவரது வீட்டின் கூரை மீதுள்ள தென்னை மட்டைகளில் அருகில் உள்ள வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கூரை மேல் ஏறி அங்கு மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை அநாயசமாகப் பிடித்தார். பாம்பை அசால்ட்டாக தனது கையில் கயிறு போல் சுற்றிக்கொண்டு கூரை மேலிருந்து இறங்கிவந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details