பதைபதைக்க வைக்கும் பள்ளி மாணவர்களின் பஸ் டிராவல்!
பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்தின் பின் பக்கத்திலிருந்து பேருந்தின் மேல் பகுதிக்குச் செல்வதற்காக வைத்திருக்கும் ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வது போன்ற காணொளி வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்படப் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.