பேருந்துக்குள் மழை.. தொடரும் அவலம்.. - Chennai Rain
கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் 22க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு ஆறு முறை அரசு பேருந்து சென்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இங்கு செல்லும் அரசு பேருந்துகளின் உள்ளே மழைநீர் வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் இந்த பிரச்சனை தற்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST