தமிழ்நாடு

tamil nadu

பாரம்பரியத்தை பறை சாற்றும் பறையாட்டத்துடன் கல்லூரியில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்

ETV Bharat / videos

திருவாரூரில் பறையாட்டத்துடன் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்! - மயிலாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 3:39 PM IST

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையுடன் கைகளில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், மாட்டு வண்டி, பறை இசை, கரகாட்டம், மயிலாட்டம் என ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று, கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கீழக்காவதுகுடி ஊராட்சி மன்றத் தலைவர் கலைக்கோவன், திருவாரூர் ஒன்றியத் தலைவர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

மாணவர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கலிட்டு, அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மக்கள் மத்தியில், நம் பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஒரு கிலோ மீட்டர் தூரம் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக வந்து இந்த சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details