தமிழ்நாடு

tamil nadu

காவலர் வீரவணக்க நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி !

ETV Bharat / videos

கடலூரில் காவலர் வீரவணக்க நாள்; வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி! - police news

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 12:06 PM IST

கடலூர்:கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959ஆம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடலூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் இன்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், டிஎஸ்பி பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, ஆயுதப்படை டிஎஸ்பி சௌந்தர்ராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர் எஸ்பி ராஜாராம் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தினர். போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details