தஞ்சாவூரில் பல இடங்களில் கடும் பனிமூட்டம்
வீடியோ: தஞ்சாவூரில் பல இடங்களில் கடும் பனிமூட்டம் - nature beauty
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தஞ்சையை அடுத்த ஆலக்குடி பகுதியில் தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் பனி அடர்ந்துள்ளது. தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது. இதனால் விவசாயப் பணிகளை செய்ய முடியாமல் காலம் தாமதம் ஏற்பட்டது. அதேபோல வாகனவோட்டிகள் சில மணி நேரம் அவதிக்குள்ளாகினர்.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST