தனியார் கல்லூரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை - ஓணம்
பவானி அருகே தனியார் பார்மசி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மகாபலி சக்கரவர்த்தி வேடம் அணிந்து வந்த மாணவரை சண்டை மேளம் முழங்க, அத்திப்பூ கோலம் இட்டு அகல் விளக்குகளை கையில் ஏந்திய படி, பூக்களை தூவி கல்லூரி மாணவிகள் வரவேற்றனர். தொடர்ந்து கேரளா பாரம்பரிய உடை அணிந்து திருவாதிரைகளி நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். பின் சண்டை மேளத்தின் இசை கேற்ப மாணவர்களை விட மாணவிகள் அதிகம் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST