தமிழ்நாடு

tamil nadu

கனமழையில் முறிந்து விழுந்த 100கும் மேற்பட்ட மரங்கள்....

By

Published : Aug 18, 2022, 10:25 AM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 100கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை ஓரமாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது. இதனால், சுமார் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது, திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றி வருகின்றனர். திருவள்ளூர் 6 செ.மீ, பூந்தமல்லி - 4 செமீ, ஜமீன் கொரட்டூர், பள்ளிப்பட்டு தலா - 3 செமீ, பூண்டி, ஆவடி தலா - 2 செமீ மழை பதிவானது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details