தமிழ்நாடு

tamil nadu

சீத்தாப்பழத்தில் தேச தலைவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்திய தங்க நகை தொழிலாளி

By

Published : Aug 9, 2023, 6:51 PM IST

ETV Bharat / videos

சீத்தாப்பழத்தில் தேசத் தலைவர்கள்; மூவர்ணத்தில் வரைந்து அசத்திய தங்க நகைத் தொழிலாளி!

கோயம்புத்தூர்:குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி யூ.எம்.டி ராஜா. இவர் தங்க கட்டிகள் மற்றும் அரிசி, முட்டை, மாம்பழம், உள்ளிட்ட பழங்களிலும் பல்வேறு ஓவியங்களை வரைந்து சாதனைப் படைத்துள்ளார். அண்மையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உருவத்தை சப்பாத்தியில் நெருப்பு ஓவியம் வரைந்து சாதனைப் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் 76வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சீத்தாப்பழத்தில் தேசத் தலைவர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து உள்ளார். மகாத்மா காந்தி, பாரதியார், சுபாஷ் சந்திர போஸ், நேரு, கட்ட பொம்மன், வேலு நாச்சியார் உள்ளிட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை தேசிய கொடி வண்ணத்தில் வரைந்துள்ளார்.

இது குறித்து யூ.எம்.டி ராஜா கூறுகையில், தங்க நகையில் பல்வேறு சிற்பங்கள் உருவாக்கி சாதனைப் படைத்த நிலையில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையிலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் உருவங்களை வித்தியாசமாக வரைய வேண்டும் என எண்ணி சீத்தாப்பழத்தில் தலைவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளதாகவும், இதற்காக இரவு முழுவதும் 12 மணி நேரம் தான் நேரத்தைச் செலவிட்டு வரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வந்தாலும் தற்போது தலைவர்களின் உருவத்தை சீத்தாப்பழத்தில் வரைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார். 

ABOUT THE AUTHOR

...view details