தமிழ்நாடு

tamil nadu

+2 மாணவன் பலி

ETV Bharat / videos

பேருந்தில் சிக்கி +2 மாணவன் பலி: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் - 12 மாணவன் விபத்து

By

Published : Jul 10, 2023, 8:07 PM IST

சென்னை:வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் ராஜேஷ்(17). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். நேற்று மாலை ராஜேஷ்  அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான செந்தில்குமார்(22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மாதவரம் ரவுண்டானா அருகே வரும் போது அவ்வழியாக வந்த மாநகர பேருந்து (தடம் எண் 57 )மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் ராஜேஷ், மற்றும் செந்தில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன் இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார். சோழவரத்தை சேர்ந்த பேருந்து ஒட்டுநர் சங்கர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவன் விபத்தில் சிக்கி பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் மூன்று பேர் இருசக்கர வாகனத்துடன்,  பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details