Video: எருது விடும் திருவிழா : 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன - திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் எருது விடும் திருவிழாவை ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST