தமிழ்நாடு

tamil nadu

நெல்லையப்பர் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

By

Published : Jul 12, 2023, 1:09 PM IST

ETV Bharat / videos

நெல்லையப்பர் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில், ஆடிப்பூரத் திருவிழா இன்றைய தினம் (ஜூலை 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவிற்காக காந்திமதி அம்பாள் சுவாமி சந்நிதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 10) மாலை காந்திமதி அம்பாள், நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (ஜூலை 12) அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, அம்பாள் சந்நிதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அதனை அடுத்து, கொடி மரத்திற்குப் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதன் பின்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி திருவிழாவின் 10 நாட்களும் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும், இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் வரும் 15ம் தேதியும், முலைகட்டும் உற்சவம் வரும் 21ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details