3,500 பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து உருவாக்கிய இந்திய வரைபடம் - The tricolor of the national flag
மயிலாடுதுறை: சீர்காழியில் இயங்கி வரும் தனியார் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இப்பள்ளியின் விளையாடு மைதானத்தில் மாணவ, மாணவிகள் 3 ஆயிரத்து 500 பேர் தேசியக்கொடியில் உள்ள மூன்று வர்ணத்திலான உடைகள், தொப்பிகள் அணிந்து பிரம்மாண்டமான இந்திய தேசத்தின் வரைபடம் அமைப்பில் அமர்ந்து பிரமிப்பை ஏற்படுத்தினர். இக்காட்சியை ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்து மாணவ மாணவிகளை பாராட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST