குடியிருப்பு பகுதியில் சாரைப் பாம்புகள் களியாட்டம்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அருகில் இரண்டு சாரைப் பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடிய காட்சியை பொதுமக்கள் காணொலி எடுத்தனர். இந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.