தண்ணீர் பஞ்சம் குறித்த ஆசிரியரின் விழிப்புணர்வு பாடல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.சாமிதுரை. இவர் தனியார் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவர், தண்ணீரின் அவசியத்தையும், தூர் வாராமல் கிடக்கும் ஏரி, குளம், குட்டை என மையப்படுத்தி சமூக அக்கறையோடு சினிமா பாடலை விழிப்புணர்வு பாடலாக மாற்றி பாடியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.