ஊருக்குள் புகுந்த சிறுத்தையை அசால்ட்டாகப் பிடித்த இளைஞர்கள்! - karnataka leopard
பெங்களூரு: மண்டியாவில் யச்செனஹள்ளி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை, அப்பகுதி இளைஞர்கள் எவ்விதமான பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுத்தையைக் கயிற்றால் கட்டிய இளைஞர்கள், வனத் துறையிடம் ஒப்படைத்தனர். இளைஞர்களின் தைரியத்தை ஊர் மக்கள் பாராட்டினாலும், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.