நாயின் கழுத்தில் கயிறு கட்டி தரதரவென பைக்கில் இழுத்துச் சென்ற கொடூரம்! - பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நாய்
குஜராத் மாநிலம் சூரத்தில் நாயின் கழுத்தில் கயிறு கட்டி சிலர் சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒருவரைக் கைது செய்தனர். இதற்கிடையில், பலத்த காயமடைந்த நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.