குதிரைக்கு இறுதிச் சடங்கு: காற்றில் பறந்த ஊரடங்கு விதிமுறைகள் - பெலகாவியில் குழுமிய மக்கள்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் மராதிமாத் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி குதிரையின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.