தேங்கி நிற்கும் நீரில் நீச்சலடித்து இளைஞர் போராட்டம்! - சாலையில் நீச்சலடித்த இளைஞர்
🎬 Watch Now: Feature Video
மடூர் தாலுகாவிலுள்ள கே.எம். டொட்டி பேருந்து நிறுத்தத்துக்கு அருகே சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரீல் இளைஞர் ஒருவர் நீச்சலடித்து கொண்டிருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இளைஞரின் செயலைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்தனர். சம்பவம் குறித்து விசாரித்ததில், கழிவு நீரோடை வசதி சரியாக இல்லாததால், இரவு பெய்த மழையில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இளைஞர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது.