காந்தி 150: ஆந்திராவின் காந்தி ஆசிரமம்...! - காந்தி 150
ஆந்திராவிலுள்ள இந்த காந்தி ஆசிரமத்தின் இயக்குநர்கள் சிறைக்குச் சென்றபின் பாழடைந்த நிலையிலிருந்த இந்த ஆசிரமத்தை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புனரமைத்தனர். காந்தியடிகளின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் விதமாக, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் இங்கு ஆண்டுதோறும் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.