டவ்தே புயல்: தரைமட்டமான ஐந்து மாடி கட்டடம்
டவ்தே புயல் காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜமல்பூர் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக நேற்றே புயல் எச்சரிக்கை காரணமாக கட்டத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.