மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தி பவன் ஆசிரமம்
காந்தியின் நினைவுகளை போற்றும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட காந்தி பவன் ஆசிரமம், காந்தியின் அரிய புகைப்படங்களையும் அவர் பயன்படுத்திய பொருட்களையும் சுமந்து நிற்கும் வரலாற்றுச் சின்னமாக திகழ்ந்துவருகிறது. காந்தியின் முக்கிய கோட்பாடான மதநல்லிணக்கத்தை பறைசாற்றும்வகையில், காந்தி பவனில் தினமும் காலை 5.30 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை நடத்தப்படுகிறது.