இலங்கை படகுகளை பறிமுதல் செய்த கடற்படை! - இந்திய கடற்படை
திருவனந்தபுரம்: போதை பொருள்களை கடத்திய கும்பலை இந்திய கடற்படை லட்சத்தீவு அருகே கைது செய்தனர். கடந்த மார்ச் 18ஆம் தேதி, இலங்கை நாட்டின் மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள், ஆயுதங்கள் ஆகியவை கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இசம்பவம் தொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.