காளை முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவர்: கலங்க வைக்கும் காணொலி - காளை முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவர்
பஞ்சாப்: பர்னாலா மாவட்டத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த காளை ஒன்று திடீரென சைக்கிளில் சென்ற முதியவரைத் தூக்கி வீசியெறிந்தது. இதில் பலத்த காயமடைந்த அம்முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.