கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கூட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ஆம் தேதி நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.