தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

வருகிறது மழைக்காலம்: உங்கள் வீட்டின் அழகை பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ் இதோ - Centre for Applied Arts

மழைக்காலத்தில் வீட்டில் படியும் நீரின் ஈரப்பதமானது வீட்டின் மூலைகளை அழகற்றதாக மாற்றும். எனவே மழைக்காலத்தில் உங்கள் வீட்டை தயார் செய்ய சில குறிப்புகள் இங்கே.

monsoon, monsoon home decor, home decor, interior design, interior designing, home decor tips, lifestyle, Punam Kalra, Centre for Applied Arts, home decoration tips
monsoon

By

Published : Sep 9, 2021, 7:12 AM IST

மழைக்காலத்தில் உடல் எதிர்ப்புச் சக்தியோடு இருக்க எப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமோ, அதே போன்று வீட்டையும் மழைக்காலத்துக்கு முன்பு தயார்படுத்திவைக்க வேண்டும். குறிப்பாக பழைய கால வீடுகளை இன்னும் கூடுதல் கவனத்தோடு தயார்ப்படுத்த வேண்டும்.

மழை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது நல்லதல்ல. மழை வந்த பிறகு வீட்டைப் பராமரிப்பது சிரமமான வேலை. சொந்த வீட்டை மட்டும்தான் பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடியிருக்கும் வீட்டில் நாம்தான் வசிக்கிறோம் என்பதால் அதிக சேதாரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீர் ஒழுகுவதை முற்றிலும் தடை செய்க

தளம் போட்ட வீடுகளாக இருந்தால் வெதரிங் கோஸ்ட் போட்டு வைக்கலாம். இது தளங்களில் ஒழுகுதலைத் தடுக்கும். சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழைநீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.

மழைக்காலம் வந்தாலே வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் லேசாக உப்பலடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை.


இந்த நேரத்தில் வீட்டை கழுவினால் அவை இன்னும் உப்பலாகி இருக்கும். கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல் வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துணியைக் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.

மரச்சாமான்கள் மீது கவனம் தேவை

மழைக்காலங்களில் கதவுகள், ஜன்னல்கள் மேலும் இறுக்கமாகிவிடக்கூடும். குழந்தைகள் வேகமாகத் திறக்கும்போது கதவுகள் சேதமடையும். ஜன்னல்களும் திறக்க முடியாமலும் போகும். சில நேரங்களில் திறந்த பிறகு மூடுவதில் சிரமம் இருக்கலாம்.

இது தற்காலிகமானது, மழைக்காலம் முடிந்த பிறகு அவை தானாகவே சரி ஆகிவிடும். எனினும் பாதிப்பில்லாமல் இருக்க மழை வருவதற்கு முன்பே கதவுகளிலும் ஜன்னல்களிலும் கைப்பிடி தாழ்ப்பாள் போன்ற இடங்களில் எண்ணெய்விட வேண்டும்.


பாத்ரூமில் இருக்கும் கதவுகள் பொதுவாகவே சேதமடைவது உண்டு. அதிலும் மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். கதவின் கீழ்ப்பாகத்தில் அதிகமான சேதாரம் ஆகும்.

மழைக்காலங்களில் பாத்ரூம் கதவுகளின் கீழ் பாகத்தில் அலுமினிய தகடு வைத்து அடிக்கலாம். இது ஈரம் பட்டாலும் அல்லது தண்ணீர் பட்டாலும் எந்தச் சேதத்தையும் கதவுக்கு உண்டாக்காது. குளித்து முடித்தபிறகு கழிவறையைக் கழுவி உலரவிட வேண்டும்.

மின்கசிவு குறித்து ஆராயவும்

வீட்டில் இருக்கும் மின்சாரப் பொருள்களில் நீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டில் கார்பெட்டுகள் இருந்தால் அதைச் சுற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அலங்கார ஃபோம் சோபாக்கள் இருந்தால் அவை மழை ஈரத்தில் பூஞ்சை ஏற்படுத்தக்கூடும். இதைத் தடுக்க அழகான நெகிழி உறைகள் கடைகளில் கிடைக்கும்.

அதை வாங்கி கவர் செய்யலாம். தினமும் சோபாக்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சோபாக்களின் கால்தான் முதலில் அரிப்பை உண்டாக்கும். அதனால் கால்களை புஷ் கொண்டு மூடிவிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.


மரச்சாமான்களில் பூஞ்சைகள் இருந்தால் ஈரத்துணியால் துடைத்து பிறகு உலர்ந்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும். சமையலறையையும் மசாலா பொருள்கள் இருக்கும் இடத்தையும் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

நீர் சேமிப்புத் தொட்டிகள்

நீர்த் தொட்டிகளை மழைக்கு முன்பே சுத்தம் செய்ய வேண்டும். வெளியிலிருந்து கழிவுநீர் உள்ளே வரக்கூடிய வீடாக இருந்தால் நீர்த் தொட்டியை சற்று மேலே உயர்த்தி வைக்க வேண்டும்.

வீட்டில் எர்த் சரியாக வேலை செய்கிறதா, மின்சார ஸ்விட்ச் போர்டுகள் பழுதாகாமல் இருக்கின்றனவா என்பதையும் கவனித்து மாற்ற வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details