தமிழ்நாடு

tamil nadu

கரோனா நோய்க் கிருமியை எதிர்த்து போராட இலாமா ஆடுவகையின் ஆண்டிபாடீஸ் உதவுமா?

By

Published : Aug 8, 2020, 3:00 PM IST

கோவிட்-19 நோய்க்கு எதிராக செயலாற்றும் தடுப்பூசியை கண்டுப்பிடிப்பதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டிவருகின்றன. இச்சூழலில் பெரு நாட்டின் விஞ்ஞானிகள் டிட்டோ எனும் இலாமா வகை ஆடுகளின் உடலுக்கு எதிராக உள்வரும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சுரப்பியைக் (ஆண்டிபாடி) கொண்டு விரிவான ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதன்மூலம் நடத்தப்படும் விரிவான ஆய்வுகளின் மூலம் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

கொரோனா மருந்து
இலாமா ஆடு வகை

பெரு: விஞ்ஞானிகள் டிட்டோ எனும் இலாமா வகை ஆடுகளின் உடலுக்கு எதிராக உள்வரும் கரோனா நோய்க் கிருமிகளை அழிக்கும் சுரப்பியைக் கொண்டு விரிவான ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இலாமாக்களில் பயனுள்ள ஆண்டிபாடிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், அவை மனித ஆண்டிபாடிகளை விட சிறியதாக இருக்கும். ஆனால் சாத்தியமான ஆண்டிபாடிகளை தனிமைப்படுத்துவதிலிருந்து மனிதர்கள் உடலில் கரோனா நோய்க் கிருமிக்கு எதிராக வேலை செய்யும் ஒரு மருந்து இருப்பதற்கு நீண்ட தூரம் இருக்கிறது. ஆனால் இதுமுதல் முறை கிடையாது. இலாமாவின் ஆண்டிபாடிகளைக் கொண்டு பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.

கரோனா தடுப்பூசி ப்ரீ புக்கிங்... சுவிட்சர்லாந்துக்கு 4.5 மில்லியன் டோஸ் பார்சல்!

மேலும், எச்.ஐ.வி, காய்ச்சலுக்கு எதிராக இலாமா ஆண்டிபாடிகள் ஒத்துழைப்பு தருமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பெருவை போன்று பெல்ஜிய ஆராய்ச்சியாளர்களும் லாமாக்களைக் கொண்டு ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வக சோதனைகளில், சார்ஸ், மெர்ஸ்-க்கு எதிராக லாமா ஆண்டிபாடிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்கட்டமாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கரோனா நோய்க் கிருமியை எதிர்த்து போராட இலாமா ஆடுவகையின் ஆண்டிபாடீஸ் உதவுமா?

ABOUT THE AUTHOR

...view details